திருப்பூர்: தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முதல்முறையாக பட்டியல் வகுப்பை சேர்ந்த 6 பேருக்கு சிமெண்ட் விற்பனை உரிமை வழங்கியுள்ளது. தாட்கோ முன்முயற்சியால், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 6 பேருக்கு டீலர்ஷிப் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிடரான பால்ராசு என்பவருக்கு முதல் டீலர்ஷிப் உரிமத்தை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.