சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி முதலமைச்சரை சந்திக்க உள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஏற்கனவே கலைஞரை சந்தித்தேன். சென்னையில் பாமக சார்பில் நடைபெற்ற ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கருத்தரங்கில் ராமதாஸ் கூறினார்.