Friday, May 10, 2024
Home » தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள் ரத்து இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: எம்டிசி தகவல்

தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள் ரத்து இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: எம்டிசி தகவல்

by Dhanush Kumar

சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: கோடம்பாக்கம் ரயில் நிலையம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே தெற்கு ரயில்வே சார்பில் இன்று (பிப்.25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர்களின் நலன் கருதி, காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகளை நியமித்து, பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

20 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi