சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார். நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.