Saturday, May 11, 2024
Home » புது கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த கோயில்: அறங்காவலர் சஸ்பெண்ட், புதிய செயல் அலுவலர் நியமனம்

புது கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த கோயில்: அறங்காவலர் சஸ்பெண்ட், புதிய செயல் அலுவலர் நியமனம்

by Ranjith

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிபூண்டி ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம், ஏகவல்லி அம்மன் கோயில், விநாயகர் கோயில், காளீஸ்வரன் கோயில், அங்காளம்மன் கோயில் என பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் மூன்று வேளையும் ஏராளமான கிராம மக்கள் வழிபடுவது வழக்கம். இங்குள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலை புதுகும்மிடிப்பூண்டி, தபால் தெரு, மேட்டு தெரு, கும்மிடிப்பூண்டி பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் குலதெய்வ கோயிலாக பாவித்து வழிபட்டு வருகின்றனர்.

இதனால் கோயிலுக்கு வருமானமும் பெருகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எல்லையம்மன் கோயிலில் பரம்பரை அறங்காவலராக காமு செட்டியார் (72) என்பவர் நிர்வாகம் நடத்தி வந்தார். அவரிடம் புது கும்மிடிப்பூண்டி மக்கள் உண்டியல் பண வரவு உள்ளிட்ட வரவு செலவு கணக்கு குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரிவர கணக்குகள் காண்பிக்காத காரணத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இந்து அறநிலையத்துறையில் இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பரம்பரை அறங்காவலர் காமு செட்டியார் மீது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் விசாரணை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். பின்னர் கும்மிடிப்பூண்டி அருகே அரியத்தூர் கிராமத்தில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் சரவணன், கூடுதலாக ஸ்ரீ எல்லையம்மன் கோயில் நிர்வாகத்தையும் கவனிப்பார் என நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் புதுகும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi