டெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 2023-ல் பாட்னாவில் தேஜஸ்வி, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக ஹரேஷ் மேத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். தேஜஸ்வி யாதவ் தனது கருத்தை திரும்ப பெறுவதாக பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தேஜஸ்வி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது.