சென்னை: உச்சநீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்தவுள்ளோம் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.