டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா, அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.