டெல்லி: நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக்குழந்தைகளிடம் வற்புறுத்தி கையெழுத்து பெறுவதாக மனுதாரர் கூற, “இக்கால மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் விரும்பி கையெழுத்திடுகிறார்கள் என்றால் அதை எப்படி தடுக்க முடியும்” என நீதிபதிகள் பதில்அளித்துள்ளார் .