Wednesday, June 12, 2024
Home » அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

by Francis

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நவம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் அமலாக்கத்துறை வாதிடப்பட்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இருதரப்பு வழக்கறிஞர்களும் விசாரணையை மதியம் வைத்துக்கொள்ளலாம் என கேட்டதற்கு அடுத்த திங்கள்கிழமைக்கு ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

You may also like

Leave a Comment

eleven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi