புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி நாளை பணிஓய்வு பெறுகிறார். இதனையொட்டி நடந்த பணிநிறைவு விழாவில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘நீதிபதி மகேஷ்வரியை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் லக்னோ அமர்வில் இருந்தபோது எனக்கு நன்கு தெரியும்.
லக்னோவில் அவர் எனக்கு மூத்த நீதிபதி. நீதிபதி மகேஷ்வரி ஜென்ட்டில்மேன் நீதிபதி, நண்பரைப்போன்ற நீதிபதி” என்று பாராட்டினார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது.