டெல்லி : டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், நியமிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில், ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. நிர்வாக விவகாரங்களில் ஒன்றிய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.