Sunday, May 12, 2024
Home » முன்கூட்டியே கோடை சுட்டெரிக்கிறது: உச்சி வெயிலில் வெளியே செல்லக்கூடாது: காய்ச்சல், அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளது

முன்கூட்டியே கோடை சுட்டெரிக்கிறது: உச்சி வெயிலில் வெளியே செல்லக்கூடாது: காய்ச்சல், அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளது

by Suresh

திருவாரூர்: கோடை பருவகாலம் காரணமாக காய்ச்சல் மற்றும் அம்மை நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ளுமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி முடிவுறும் நிலையில் அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனி காலமாக இருப்பது வழக்கமாக இருந்து வருவதுடன் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டில் இந்த வெயில் என்பது நடப்பு (மார்ச்) மாதத்திலேயே துவங்கியுள்ளது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் தற்போதே குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் துவங்கி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோடை வெயிலின் போது மனிதர்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள், நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள அதிகளவில் நீர் அருந்துவதுடன், நீர் சத்து அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தினந்தோறும் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துகொள்ள வேண்டும் என்பதுடன் இந்த கோடை வெயிலிலிருந்து நோய் ஏற்படுவதை தவிர்த்துகொள்ள பொது மக்கள் தங்களது பணிகளுக்காக வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு பணி காரணமாக வாய்ப்பில்லாமல் போகும் பட்சத்தில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் வெயிலின் உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது. மேலும் இந்த சீதோஷன நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், அம்மை நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் பொது மக்கள் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்ளாமல் உடன் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனையை அணுகுமாறும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் குழந்தைகளையும் பாதுகாப்பாக பெற்றோர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்,. கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துசெல்வதை தவிர்க்க வேண்டும் என்பதுடன் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

20 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi