சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை: மே 9ம் தேதி முதல் 27ம் தேதி வரை 6 முதல் 10ம் வகுப்புகளை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கோடை கால அறிவியல் முகாம் சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை கோடை கால அறிவியல் முகாம் நடத்தப்படுகிறது.
8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9, 10 ஆகிய தேதிகளில் ரோபோட்டிக்ஸ் முகாம் நடத்தப்படும், 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 11, 12 ஆகிய நாட்களில் ஏரோமாடலிங் முகாம், மே 25, 26 ஆகிய தேதிகளில் வானியல் முகாம், மே 27ம் தேதி 3டி அச்சுப்பொறி முகாமும் நடத்தப்படும். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி சூரிய கடிகார முகாமும், மே 22,23,24 ஆகிய நாட்களில் அறிவியல் முகாமும் நடத்தப்படும். ஒவ்வொரு முகாமுக்கும் அதிகபட்சம் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 044- 2441 0025, 2952 0375 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.