சூளகிரி : சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட துரை ஏரியில், தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகவிஜயன் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக சூளகிரி தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் அகிலன் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், ஏரி, கிணறுகளில் விழுந்தவர்களை மீட்கும் போது, பிளாஸ்டிக் கேன்களை இடுப்பில் கட்டி கொண்டு தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.