சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. கரும்பு கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க ஆணையிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அய்யாக்கண்ணு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.