சென்னை: வாரிசு அரசியலை ஒழிப்போம் என பேசும் மோடி, வாரிசுகளை மேடையேற்றியதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். “வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும். மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி அனந்தன் மகள் தமிழிசை ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று மோடி பேசுவது அவரின் அதீத நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.