Saturday, May 11, 2024
Home » வாரிசு சான்றிதழ் அரசாணையில் திருத்தும் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

வாரிசு சான்றிதழ் அரசாணையில் திருத்தும் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

by Lavanya

சென்னை: வாரிசு சான்றிதழ் அரசாணையில் திருத்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த சந்தானம் கடந்த ஆண்டும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பும் இறந்துவிட்டனர். இருவருக்கும் வாரிசு இல்லாத நிலையில், தங்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரிகளும் பெரம்பூர் வட்ட ஆட்சியரிடம் கடந்த மே மாதம் விண்ணப்பித்துள்ளனர். தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, வாரிசுகள் இல்லாத தங்களது சகோதரர் இறந்த வழக்கில் வாரிசு சான்றிதழ் கோரி அவரது தம்பி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாசில்தார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.பிந்திரன் ஆஜராகி, கடந்த ஆண்டு வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில், மணமான ஆண் மரணிக்கும்பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமெனு மட்டுமே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் தங்களது பெற்றோர் மற்றும் சகோதரர் சந்தானத்தின் மனைவி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சந்தானத்திற்கு வாரிசுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதனால் நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது வீடு மற்றும் வங்கி கணக்கை கையாள்வாதற்காக இரண்டாம் நிலை வாரிசுகளான தங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி, விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார்.இந்த வழக்கு இன்று இன்று விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிழ் வழங்க வேண்டும் என்பது பற்றி திருத்தம் செய்ய ஆணையிட்டுள்ளது. திருமணமாகி மனைவி, வாரிசுகள் இல்லாத ஆணின் வாரிசு சான்றிதழ் யாருக்கு வழங்க வேண்டும் என்று தெளிவில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது.வாரிசுரிமை சட்டத்துக்கு பொருந்தும் வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

10 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi