பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு அறையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள் நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் மக்களிடம் அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு வழங்கப்படும் உணவை உண்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர், பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், ஆணையர் கோபிநாத், தாசில்தார் மதிவாணன், பொன்னேரி தலைமை மருத்துவர் அசோகன், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உமாபதி, நல்லசிவம், சமூகஆர்வலர்கள், காவல்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.