சென்னை: மாணவர்களை மிரட்டிய விவகாரத்தில் தஞ்சை ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வல்லம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விவகாரத்தில் ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியை மீது கல் விழுந்த விவகாரத்தில் பள்ளி மாணவர்களை மிரட்டி துன்புறுத்திய புகாரில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.