Thursday, May 16, 2024
Home » மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணத்தை இங்கிலாந்து உயர்த்தியது

மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணத்தை இங்கிலாந்து உயர்த்தியது

by Dhanush Kumar

லண்டன்: இங்கிலாந்து அரசு மாணவர் மற்றும் பயணிகள் விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விசா கட்டணப்படி மாணவர் விசாவுக்கு 490 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 49,500 செலுத்த வேண்டும். ஆறு மாத காலத்துக்குட்பட்ட பயணிகள் விசாவுக்கு 115 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 11,600 செலுத்த வேண்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஜூலை மாதம் இந்த உயர்வு பற்றி அறிவித்ததுடன், பொதுத்துறைகளில் உயர்த்தப்பட்ட சம்பள விகித செலவுகளை சரிக்கட்ட கட்டண உயர்வு அவசியம் என்றார்.

You may also like

Leave a Comment

12 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi