Wednesday, May 15, 2024
Home » மாணவி ஸ்ரீமதி வழக்கில் தாயிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு; ஆசிரியர்கள் பெயர் நீக்கம் குறித்து 21ம் தேதி ஆட்சேபனை தெரிவிக்கலாம்: விழுப்புரம் கோர்ட் உத்தரவு

மாணவி ஸ்ரீமதி வழக்கில் தாயிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு; ஆசிரியர்கள் பெயர் நீக்கம் குறித்து 21ம் தேதி ஆட்சேபனை தெரிவிக்கலாம்: விழுப்புரம் கோர்ட் உத்தரவு

by Suresh

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் குறித்து வரும் 21ம் தேதி ஆட்சேபனையிருந்தால் தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி மரண வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு பிறகு 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் இவ்வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாணவியின் தாய் செல்விக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இவ்வழக்கில் இருந்து கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதால் இதில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஆட்சேபனை தெரிவிக்கமுடியாது என்றும், அதன் நகலையும், மேலும் சில ஆவணங்களையும் வழங்கிடுமாறு கடந்த 5ம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவைஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க ஒப்புதல் தெரிவித்து நேற்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாய் செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சேபனையிருந்தால் வரும் 21ம் தேதி தெரிவிக்கலாம் என்று கூறி அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

sixteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi