சென்னை: மாணவி கணக்கில் இருந்து திருடுபோன ரூ.3லட்சத்தை திருப்பி தர பேடிஎம்-க்கு உத்தரவிடும்படி ஆர்பிஐக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் மாணவி பவித்ரா பணத்தை திரும்ப அளிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து காணாமல்போகவில்லை; பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல் போனது என வங்கி தரப்பு கூறியுள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணப் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளருக்கு தெரியாமலோ (அ) வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பரிவர்த்தனை நடைபெறாது எனவும் பேடிஎம் கூறியுள்ளது.