Wednesday, May 15, 2024
Home » விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி எடப்பாடியில் நூதன போராட்டம்: தக்காளி, வெங்காயத்தை மாலையாக மாற்றி கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம்

விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி எடப்பாடியில் நூதன போராட்டம்: தக்காளி, வெங்காயத்தை மாலையாக மாற்றி கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம்

by Lavanya

சேலம்: விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி எடப்பாடியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளி, வெங்காயத்தை மலையக மாற்றி கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமெழுப்பினர். நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பாக தக்காளி, பருப்பு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தக்காளி, வெங்காயம், உள்ளிட்டவைகளை மாலையாக அணிவித்தும் பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

11 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi