மதுரை: வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள தொழிலாளர்கள் மதுரை போக்குவரத்துக்கழக பணியனை வாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் வேறு நபர்கள் உதவியுடன் பேருந்துகள் இயக்கப்படுவதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பணிமனையில் இருந்து செல்லும் பேருந்தை தடுத்து நிறுத்தி தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.