Thursday, May 16, 2024
Home » பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

by Suresh

கடலூர்: கடலூர் அருகே பட்டா மாற்றம் செய்ய, ரூ.40,000 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ள கீழ் அழிஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு (46) விவசாயியான இவர், தனது இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி, விண்ணப்பம் செய்திருந்தார்.

இதற்காக மதலபட்டு விஏஓ பிரபாகரன் (45) என்பவரை அணுகி உள்ளார். அப்போது அவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.40,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனு இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் நேற்று மதியம் சீனு, விஏஓ பிரபாகரனை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.

அப்போது பிரபாகரன் அந்த பணத்தை வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் பிரபாகரனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரை கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi