Monday, June 17, 2024
Home » புயல் வெள்ள நிவாரணம் ரூ.6,000 வாங்கியபோது வாடிய முகத்தில் புன்னகையை கண்டோம்: ரேஷன் ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி

புயல் வெள்ள நிவாரணம் ரூ.6,000 வாங்கியபோது வாடிய முகத்தில் புன்னகையை கண்டோம்: ரேஷன் ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: மிக்ஜாம் புயலால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டிய நிலையில், ரேஷன் கடை பணியாளர்களாகிய எங்களால் பொருளாதார ரீதியாக எதுவும் உதவி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. முதல்வர் ஒரு தந்தையாக, சகோதரனாக களத்தில் நின்று மீட்பு, நிவாரண பணிகளை செய்ததுடன், மக்களின் துயர் துடைக்க உடனடியாக நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 அறிவித்தார். இந்த பணம் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து பெரிய அளவிலான தொகையை வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி.

ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும்போது, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ரூ.6,000ஐ கைகளால் வாங்கியபோது வாடிய முகத்தில் புன்னகை சிரிப்பு, புன்முறுவலோடு நடந்து செல்லும் அழகிய அற்புதமான காட்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த புகழ் அனைத்தும் முதல்வரையே சாரும். மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்கும் ரேஷன் கடை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தனித்துறை கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும்.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi