ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோட்டை தெரு அய்யனார் கோயில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்றுமுன்தினம் எதிர்ப்பை தனியாக பூத்தட்டு எடுத்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தஞ்சாவூர் ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அங்கு சென்று போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.