சேலம்: எடப்பாடி அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் எடப்பாடி நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் பின்னர் தயங்கியதாக மனுவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.