சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்கின் விலை முதல் முறையாக நேற்று ரூ.900ஐ தொட்டு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிக மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை (SBI) பின்னுக்குத் தள்ளி முதன்மை அந்தஸ்தை எல்.ஐ.சி.பெற்றுள்ளது. இதன் சந்தை மதிப்பும் ரூ.5.8 லட்சம் கோடியை தொட்டுள்ளது.