டெல்லி: ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு நடத்தி வருகிறார். மீட்பு பணிகள் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலியில் கேட்டறிந்தார். மீட்பு பணிகளை விரைவுபடுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.