நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ம் தேதி திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். 10 மீனவர்களுக்கு திரிகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஆக.21 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. காவல் முடிந்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 10 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.