ராமநாதபுரம் : ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பிப்.20-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.