Thursday, May 9, 2024
Home » எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

by Neethimaan
Published: Last Updated on

 

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களுடன் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்தபோது 25 தமிழக மீனவர்கள், 3 படகுகளை இலங்கை வீரர்கள் சிறைபிடித்தனர். மற்றொரு சம்பவத்தில் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த 7 மீனவர்கள் கைது; 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 32 தமிழக மீனவர்களும் மன்னார், யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை கடற்படை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 10ம் தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களும், கடந்த 15ம் தேதி காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 21 மீனவர்களும், இன்று 32 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரே மாத்தத்தில் 75 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

fifteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi