ராமநாதபுரம்: கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மண்டபம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 22பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகினர். வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 22 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது.