புழல்: சோழவரம் ஒன்றியத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றியம் ஆத்தூர், சோழவரம், காரனோடை, எருமை வெட்டிபாளையம், பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஆத்தூர் விஜிபி மேடு பூங்காவில் நேற்று நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சற்குணம் தலைமை தாங்கினார். சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், சத்யா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள். இந்த மருத்துவ முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.