திருப்போரூர்: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட சமூக தணிக்கை மற்றும் பயனாளிகள் தேர்வுக்கென, சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது. ஒன்றியத்திலடங்கிய கொளத்தூர், மடையத்தூர், கொட்டமேடு, கீழூர், காயார், குண்ணப்பட்டு, கேளம்பாக்கம், கோவளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், செலவிடப்பட்ட தொகை, வருகைப்பதிவேடு ஆகியவை சரிபார்க்கப்பட்டு பணிகள் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.