புதுடெல்லி: கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பெய்யும். இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், தென்மேற்கு பருவ மழையின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரியைவிட அதிகமாக 106 சதவீதம் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில் 70 சதவீதத்தை வழங்குவது தென்மேற்கு பருவமழைதான். ஆனாலும், பருவநிலை மாற்றத்தால் மழை நாட்கள் குறையும் என்றும் குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்றும் பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.