Sunday, May 19, 2024
Home » தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல்: CMBT நிர்வாகம்

தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல்: CMBT நிர்வாகம்

by Arun Kumar

சென்னை: இன்று முதல், முன்பதிவு செய்த, செய்யாத பயணிகள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள CMBT நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று இயக்கப்பட உள்ள நிலையில், பொது மக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இன்றுமுதல் முழுமையாக இயக்க இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு SETC பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். சாதாரண நாட்களில் 300, வார இறுதி நாட்களில் 360 SETC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

தென்மாவட்டங்களுக்கு மக்கள் எளிதாக செல்ல ஏதுவாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, ஓட்டுநர், நடத்துநர்களுக்கான ஓய்வறைகள் ஆகியன திறக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்துகள் இயக்கபடுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளியில் 270 நடைகள் பேருந்து இயக்கம்.

பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்தும் ஆம்னி பேருந்துகள் வெளியூர்களுக்கு செல்லும். பொங்கல் பண்டிகைக்கு பின் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வழித்தடம் அறிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதவிக்கு 7845700557, 7845727920, 7845764345, 7845740924 ஆகிய எண்களை அழைக்கலாம். 149 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் பேருந்து விவரங்களை அறியலாம்.

You may also like

Leave a Comment

1 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi