சென்னை: எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச் சாவடியில் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளியில் சவுமியா அன்புமணி தனது வாக்கை செலுத்தினார். நெல்லை தொகுதிக்குட்பட்ட ராதாபுரம் அருகே பெரியநாயகபுரம் வாக்குச் சாவடியில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.