தேவையானவை:
சௌசௌ (சிறியதாக) – 1 ,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1டேபிள்ஸ்பூன்,
மைதா – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
ஆப்ப சோடா – 1சிட்டிகை,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையானஅளவு.
செய்முறை:
சௌசௌவை தோல், விதை நீக்கி வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை மாவுடன் ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சௌசௌ துண்டுகளை மாவில் நன்கு நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள்.வித்தியாசமான பஜ்ஜி இது.