Thursday, May 16, 2024
Home » குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்த சட்ட மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்த சட்ட மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

by Karthik Yash

திருச்சி: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள், கடந்த 13ம்தேதி சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, 3 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருக்கு துணைவேந்தர் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மற்றும் 7 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை நாளை (18ம்தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட 2 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் நாகராஜ் உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

17 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi