திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி 1971ஆம் ஆண்டு தமிழக முதல்வராக டாக்டர் கலைஞர் இருந்த போது ஆரம்ப பள்ளியாக கொண்டுவரப்பட்ட பள்ளியாகும். இந்நிலையில் இந்தப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸை அமைத்து தருமாறு பூந்தமல்லி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ. 2 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்து தந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், சீ.காந்திமதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி ரூ. 2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸை தொடங்கி வைத்தார். இதில் பொது பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.விஜய் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் எஸ்.பாஸ்கரன், உதவி பொறியாளர் ஆர்.சந்திரசேகரன் பொதுக்குழு உறுப்பினர் வி.குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய அவைத்தலைவர் டி.அண்ணாமலை, ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், எம்.இளையான், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ், த.குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி சங்கர், எம்.கே.பக்தவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கலையரசன், வே.தணிகாசலம் மற்றும் பொன்.முருகன், ஏ.சைமன், எஸ்.பாலமுருகன், எஸ்.செந்தில்குமார், எம்.கே.பி.பாபு, கேசவன், திருமலைராஜ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.