டெல்லி: ஆற்றல் மிகுந்த திறமையான நபர்களை உலக நாடுகளுக்கு இந்தியாவால் இன்று வழங்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும். ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.