விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மேன் முத்துகருப்பன் மீது வழக்கு பதியப்பட்டது.