விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்து எதிரொலியாக பட்டாசு ஆலையில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.