மதுரை: காளையார்கோவில் அருகே கோயில் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கு தொடர்பாக சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவதுமாக முடிந்துவிட்டது என சிவகங்கையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.