டெல்லி: முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது. தலைமை நீதிபதி உரிய ஒப்புதல் வழங்கும் முன்பே தனி நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார் என பதிவாளர் அறிக்கையை குறிப்பிட்டு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும்வரை ஏன் தனிநீதிபதியால் காத்திருக்க முடியவில்லை? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.