நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது. மே மாதம் கோடை சீசனில் சிம்ஸ் பூங்காவில் 64-வது ஆண்டு பழ கண்காட்சியையொட்டி 130 வகை ரக மலர் நாற்றுகள் நடப்படுகிறது. சால்வியா மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின் உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.