சிக்கிம்: சிக்கிம்மில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து 2,011 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணவில்லை. அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.